Friday, March 16, 2018

சுயநலமே பிரதானம் - சந்திரபாபு நாயுடு வெளியேறியதன் உண்மை காரணம்


சந்திரபாபு நாயுடு ஒரு பச்சோந்தி.

10 வருடம் வீட்டில் உட்கார்ந்து இருந்தவர் மோடி அலையில் பிழைத்து முதல்வரானார். இவருக்கும் ஜெகன் கட்சிக்கும் இடையே இருந்த வாக்கு சதவிகிதம் மிக குறைவே.

இவர் மீதுள்ள இரண்டு ஊழல் புகார்கள் கழுத்தை நெறிக்குமளவிற்கு  வரும் சூழலில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள, பாஜக அணியை விட்டு வெளியேறியுள்ளார். மாநில நலன் என்று சப்பைக்கட்டு சொல்கிறார்.

முதல் ஊழல் 
ஆந்திரா முழுவதும்.வீடுகளுக்கு கேபிள் டீவி மற்றும் இன்டர்நெட் தரும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்கு பெயர் Teraband  . இதில் ஒரு சர்ச்சை உண்டு. நாம் என்ன டீவி பார்க்க வேண்டும், எந்த இணையதளத்தை பார்க்க வேண்டும் என்று அரசு தீர்மானிக்க முடியும். உதாரணமாக திமுக, இது போன்ற ஒரு விஷயத்தை சன் டிவிக்கு கொடுத்துவிட்டால், அவர்கள் சன் டீவி, கலைஞர் டீவி தவிர்த்த தொலைக்காட்சிகளை block செய்யமுடியுமல்லவா, அதே போல. தனது கட்சிக்கு எதிரான இணையதளங்களை முடக்கவும் முடியும். (ஆனால் இத்திட்டம் படு தோல்வி. மொத்தமே 1 லட்சம் பேர் மட்டுமே மாநிலம் முழுவதிலுமிருந்து இணைந்துள்ளார்கள்).  பிரச்சனை இதுவல்ல.  இதில் உள்ள ஊழல்.

இதற்கான உரிமத்தை Teranet என்கிற நிறுவனம் 380 கோடிக்கு  பெற்றது. பிற நிறுவனங்கள் இதைவிட குறைவான தொகை சொல்லியும், Teranet க்கு அளிக்கபப்ட்டது.  இதன் இயக்குனர்கள், நாயுடுவின் ஹெரிடேஜ் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர். அனைவருமே நாயுடுவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.

காங்கிரஸ் மற்றும் ஜெகன் கட்சிகள், 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சனை கிளப்ப,  விசாரணை நடைபெற்று வருகிறது. எந்நேரமும் ரெய்டு நடக்கலாம். தனது செல்வாக்கால் விசாரணையை நிறுத்த முயன்று தோற்றுப்போனார் சந்திரபாபு நாயுடு.

அமராவதி நில ஊழல் 

இது மிகப்பெரிய ஊழல். எந்த இடத்தை தலைநகராக தேர்வு செய்வது என்று அறிவிக்கப்படாத நிலையில், நாயுடுவின் உறவினர்கள், அமைச்சர்கள் அமராவதிக்கு சுற்றுப்புறங்களில் சல்லிகாசுக்கு ஏக்கர் கணக்கில், விவசாயிகளை ஏமாற்றி  மனைகளை வாங்கி போட்டனர். பின்னர் அமராவதி தலைநகர் என்று அறிவிக்கப்பட்டதும் இந்த நிலங்களின் விலை 20 முதல் 50 மடங்கு வரை உயர்ந்தது.

நமக்கு புரியும்வகையில் சொல்வதானால், சென்னை விவசாய கிராமம். திருச்சி, மதுரை, சென்னை, நெல்லை, கோவை இவைகளில் எதை தலைநகராக்குவது என்று ஆய்வுகள் நடக்கிறது. சென்னையில் ஒரு ஏக்கர் 1 லட்சம். தாம்பரத்தில் 50000 என்று வைத்துக்கொள்வோம்.  இப்பொழுது தாம்பரத்தில் நான் 100 ஏக்கர் வாங்க 50 லட்சம் ஆகும். நாளை சென்னை தலைநகர் என்று தீர்மானமானால், ஒரு ஏக்கர் 20 லட்சமாகிறது. நான்கே வருடத்தில் எனது சொத்து மதிப்பு 20 கோடி. 

அதுமட்டுமில்லாமல் சென்னையிலேயே விவசாயிகள் கைவசம்  வைத்துள்ள இடங்கள் தொழிற்சாலைக்கு என்றும், அரசு திட்டங்களுக்கு என்றும் (அதாவது சுலபமாக அரசு சுலபமாக எடுத்துக்கொள்ளலாம்), அமைச்சர்கள் வாங்கிய சொத்துக்கள் வணிக வசதிகளுக்கென்றும் பிரிக்கப்படுகிறது. (வீடு, காலேஜ், தியேட்டர்). எனவே இவைகளை அரசு எடுத்துக்கொள்ளாது, மாறாக அவர்கள் அதிக விலைக்கு விற்றுக்கொள்ள முடியும். இது போல பல ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வளைக்கப்பட்டுள்ளன.

இது சென்ற வருடம் பெரிய புயலை கிளப்பியது.  ஜெகன் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இந்த ஊழலை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இவ்வருட இறுதியில் தொடர் போராட்டங்கள் செய்து ஆட்சியை முடக்க முயற்சி செய்தனர்.


இந்த இரண்டு நெருக்கடிகள் போதாது என்று, விவசாய சங்கங்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்ற முறை எப்படி விவசாயிகளை கை விட்டாரோ இம்முறையும் அதுவே நிலை. இன்றைக்கு தேர்தல் நடந்தால் நாயுடு மண்ணை கவ்வுவது உறுதி.

இப்படி பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ள அவர் செய்த விஷயம், மத்திய அரசிலிருந்து விலகுவது, மோடியை எதிர்ப்பது.

மோடியை எதிர்ப்பதால் அவருக்கு மூன்று லாபம் 


1. காங் இவரை இனி திட்டாது, என்ன செய்தாலும் ஜால்ரா போடும். நில ஊழல் பற்றி கப்சிப் 

2. கேபிள் டீவி ஊழலில் இவர் மீது ரெய்டு நடந்தால் 'பழிவாங்கும் நடவடிக்கை' என்று சொல்லி விடலாம்.

3. விவசாயிகள் இனி இவரை காரணமே இல்லாமல் கொண்டாடுவார்கள். அடுத்த தேர்தலிலும் ஒட்டு போடுவார்கள்.

இப்படி ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் அடிக்க முயற்சிக்கிறார் சந்திரபாபு நாயுடு 

Putting Self First - Real reason why TDP quit NDA

How Chandrababu Naidu trying to kill 3 birds in one stone?

To protect rights of Andhra is just an excuse and real reason is he has been mirred in 2 real big scams. 

First scam is Teranet

Teranet as its called offers internet and cable services to domestic users. What makes it controversial is that, Govt can control what the viewer wants to watch and how one can use internet. BJP was opposing this from the beginning because it give absolute control to Govt over what viewer can watch / read and post. To put it simple, TDP can simply cut off the channels that air anti-TDP news. Similarly they can block websites of opposition parties. In short, Naidu was trying to do a China in Andhra. However the issue is not that.

Tera Software, a blacklisted firm was awarded fibrenet contract by AP Govt in Aug 2015.  Many directors of Heritage are in the board of Tera Software too. It was suspected that Tera Software is a benami of Heritage, which is close to Chandrababu Naidu.  The scam is about 392 crore.

YSRC and Cong had already demanded enquiry in 2015.  The investigating agencies too enquired for a possible scam. Investigating agencies are closing in on Heritage group, a company close to Chandrababu Naidu.p

Naidu tried his best stop the investigation, but it didn't happen. CBI and ED were just weeks away from raiding.  The best way to protect one's face is play the victim card and that's what Chandrababu Naidu chose to. Now if CBI raids Heritage, he can call it political vendetta


Amravati Land Scam

Teranet is nothing compared to Amravati Land Scam.  To build its own capital, AP Govt acquired 25000 acres from farmers around 29 capital area village. Some farmers happily gave lands. For other the Naidu Govt used Carrot and Stick. (This happens in most of Govt projects, so this is not big deal).

The big controversy is that family members close to Naidu and many of his ministers had purchased acres and acres of land from farmers on the outskirts of Amravati at throw away prices (This happened before Naidu officially announced that Amravati will be the new capital city). Innocent farmers gave their land to these bigwigs. 

Land purchased by Gummadi Naresh, an alleged proxy for minister Prattipati Pulla Rao, purchased 196 acres and paid just Rs 39 crore in 2014. The current value of the land in their possession is Rs 784 crore (20 fold rise in 4 years).

Lands have been purchased in the name of Vemuri Ravikumar, who made arrangements for Chandrababu's US tour before 2014. He was rewarded with the post of CM's advisor. He purchased 500 acres at Rs 50 crore and the present value is a whopping Rs 650 crore. 

Minister Narayana, who is monitoring the capital city land pooling, owns a staggering 3129 acres in the area.

The lands owned by these biggies have been bracketed in commercial zone, while the land owned by the farmers are in green zone. Already several farmers in Krishna district are on warpath over their lands being rendered worthless due to their bracketing in green zone. The difference in land price is startling. while the land owned by VIP benamis is around Rs 4 crore per acre, the land owned by farmers is selling at a mere Rs 20 lakh per acre.

YSRC, Congress have been increasing their tempo on Naidu over the scam. They already hit the streets once and were planning for massive rally close to 2019 elections. Farmers are very angry against Naidu. Faced with controversy on every side, the easy route of escape for Naidu was to quit NDA and attack Modi.

Three birds in One Stone

1. If you attack Modi, Congress gives you lifeline and make you Uthamapurush. No matter how much scams you have done (like Lalu)
2. Talk about Andhra pride, divert the attention of farmers and common people, gain sympathy
3. If ED closes in, play victim card


Sources





Sunday, March 11, 2018

கர்நாடக மாநில தனிக்கொடி - அபத்தமா, ஆபத்தா?

கர்நாடக மாநிலத்திற்கென்று அதிகாரப்பூர்வ கொடி வேண்டும் என்று அங்குள்ள சில அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மாநிலத்தை ஆளும் காங் அரசும் அதற்கு செவி சாய்த்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  இந்த கோரிக்கைகள் புதியதல்ல, தமிழ்நாட்டில் திடீர் போராளீகள் அவ்வப்பொழுது முளைப்பது போல, கர்நாடகாவிலும் அவ்வப்பொழுது கிளம்புவதுண்டு. இது வரை ஆட்சி செய்த அரசுகள், இந்த கோரிக்கைகளை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டன.

பஞ்சாப் தவிர்த்து பெரிய மாநிலங்கள் எல்லாவற்றிலும் காணாமல் போய்விட்ட காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க என்ன செய்வது என்று முழி பிதுங்கியுள்ள நிலையில், மாநிலத்திற்கு தனிக்கொடி என்கிற கருத்தை ஆதரித்துள்ளது. இதற்காக ஒரு தனி கமிட்டி அமைத்து, அந்த கமிட்டி மஞ்சள், வெள்ளை, சிவப்பு மூவர்ணக்கொடியை பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசின் இம்முடிவிற்கு தேசியவாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது குந்தகம் விளைவிக்கும் என்பது பெரும்பாலோனோர் கருத்து. மக்களின் மொழியுணர்வை தூண்டி விட்டு ஓட்டு அறுவடை செய்ய முடிவெடுத்துவிட்டது காங்கிரஸ். 

"மாநிலத்திற்கென்று தனிக்கொடி வைத்துக்கொள்ளக்கூடாது என்று சட்டம் இல்லை" என்று வாதிடுகிறார்கள், என்ன ஒரு பித்துக்குளித்தனம்.  இப்படி ஒரு பிற்போக்கான எண்ணத்துடன் நாளைய அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்று நமது அரசியல் சாசனத்தை எழுதியவர்கள் கற்பனைக்கூட செய்திருக்க மாட்டார்கள், எனவே அது பற்றி சட்டக்குறிப்பு இல்லை.

இதை பின்பற்றி ஒவ்வொரு மாநிலமும் தனிக்கொடி கோரிக்கை வைத்தால் என்ன ஆகும்? 

தமிழ்நாட்டில் தற்பொழுது பெரும்பாண்மை உள்ளது அதிமுக. கருப்பு வெள்ளை சிவப்பு கொண்ட கொடியே மாநிலத்தின் கொடி என்று முடிவெடுத்தால் என்ன ஆகும்?  ஆட்சி மாறி திமுக வந்து அவர்கள்,  "தனிக்கொடி வைத்துக்கொள்ளக்கூடாது என்று சட்டத்தில் இல்லாதது போல, கொடியின் நிறத்தை மாற்றக்கூடாது என்று சட்டம் இல்லையே" என்று சொல்லி கொடியின் நிறம் கருப்பு சிவப்பு என்று மாற்றினால் என்ன நடக்கும்?  தமிழ் புத்தாண்டு, தலைமை செயலகம், மாநிலக்கொடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். (எல்லா திட்டங்களுக்கும் அம்மா, கலைஞர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் இவர்கள், எனவே இவர்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியாது)

மஹாராஷ்டிராவில் பெரும்பாலான வீடுகளில்  காவிக்கொடி  பறக்கிறது. நாளையே மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் காவிக்கொடியே அவரவர் மாநிலத்தின் கொடி என்று முடிவெடுத்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? 

இமயம் முதல் குமரி வரை ஒரே தேசம். பல்வேறு காரணிகளால் வேறுபட்டு இருந்தாலும் நாம் அனைவரும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்கிற எண்ணத்துடனேயே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு, அம்பேத்கர், படேல் ஆகியோரின் கடும் எதிர்ப்பையும் மீறி, நேரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக்கொடி வைத்துக்கொள்ள அனுமதியளித்தார். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று பின்னர் தெரிந்தது.   காஷ்மீருக்கு உள்ள தனிக்கொடியே வேண்டாம் என்கிற எண்ணம் வலுத்துவருகிற நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி என்பது பெரும் ஆபத்தில் போய் முடியும்.  மற்ற மாநிலங்களுக்கும் இந்த வியாதி பரவினால், தேசம் பலவீனம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.