Wednesday, September 13, 2017

மாணவர்கள் மருத்துவ படிப்புடன் விளையாடிய மாநில அரசு

நீட் விவகாரத்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாழாய்விட்டது  என்று போலி பிரச்சாரம் செய்யும் திமுக, காங்கிரஸ் மற்றும் சுண்டைக்காய்களே, பாண்டிச்சேரியில் அம்மாநில அரசு 770 மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30க்குள் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் முடிக்கப்படவேண்டும், ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தடையையும் மீறி மனம் போன போக்கில் 2016ல் அக்டோபர் 6 வரை கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி மருத்துவ கவுன்சிலின் வழிக்காட்டுதல்களை சற்றும் சட்டை செய்யாமல், நீட் அடிப்படையில் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.  தனியார் கல்லூரிகள் கட்டணம் பெற்றுக்கொண்டு மாணவர்களை சேர்த்துக்கொண்டன, இருப்பினும் இந்த மாணவர் சேர்க்கையே முறைகேடானது என்று அப்பொழுதே புகார் எழுப்பப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மற்றும் மருத்துவ கவுன்சிலிடம் புகார் அளிக்கப்பட்டது. 10 மாதங்கள் கழித்து, இந்த ஆண்டு ஜுலை மாதம் முறைகேடாக மாணவர்களை சேர்த்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரி காங் - திமுக கூட்டணி அமைச்சரவை உத்தரவிட்டது. இந்த 770 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யவும்  பரிந்துரை செய்தது புதுச்சேரி மாநில அரசு.

என்ன வேடிக்கை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டாவில் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடத்தி முறைகேடுக்கு வித்திட்டது புதுச்சேரி காங்- திமுக அரசு, நடவடிக்கை என்னவோ கல்லூரிகள் மீது மட்டும்.  கல்லூரிகள் மீது நடவடிக்கை எப்படியோ போகட்டும், மாணவர்கள் எதிர்காலம் வீணாகியுள்ளதே, அதற்கு யார் பொறுப்பு?

770 மாணவர்கள் சுமார் தலைக்கு 4 லட்சம் கட்டியிருந்தாலும் சுமார் 25 கோடி ரூபாய் இந்த கல்லூரிகள் கல்லா கட்டியுள்ள. மானவர்கள் கட்டிய பணமும் திரும்ப வரப்போவதில்லை, இரண்டு ஆண்டுகள் வீண் (இந்த ஆண்டுக்கான விண்ணப்ப தேதி முடிந்து விட்டதால், இந்த ஆண்டு அவர்களால் எந்த படிப்பிலும் சேர முடியாது).

இது ஒரு புறம் இருக்க, பாண்டிச்சேரி பல்கலை கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில்  MBBS படிப்பில் சேர்ந்த 304 மாணவர்கள் முதலாமாண்டு தேர்வு எழுதாமல் செய்துவிட்டது புதுச்சேரி அரசும் தனியார் கல்லூரிகளும். மருத்துவ கவுன்சிலிங் விதிப்படி, MBBS படிப்பில் சேரும் மாணவர்களின் அடிப்படை தகுதி தேர்வு (+2 சாண்றிதழ் ) சேர்க்கை முடிந்த குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அரசு கவுன்சிலிங் மூலம் சேர்ந்தவர்களது சான்றிதழ்கள் முறையாக அனுப்பிவைக்க பட்டுளளது, ஆனால் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா மூலம் சேர்ந்த 304 மாணவர்கள் சாண்றிதழ்கள் அனுப்ப படவில்லை. இவர்களுக்கு தகுதி இருக்கிறதா தெரியாத சூழலில்,  மருத்துவ கவுன்சில் புதுச்சேரி அரசிடம் குறிப்பிட்ட சில கல்லூரிகள் செய்த முறைகேடுகள் பற்றி எடுத்துரைத்து, உடனடியாக சாண்றிதழ் பெற்று தர கேட்டது , ஆனால் புதுச்சேரி அரசு அவ்வாறு செய்ய தவறியதால் 304 மாணவர்கள் முதலாமாண்டு தேர்வு எழுத முடியவில்லை.  இது நடந்தது இந்த ஆண்டு ஜூன் மாதம்.

இவ்வாறாக 1074 மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணம் புதுச்சேரி காங் - திமுக அரசு தான்.  தனியார் கல்லூரிகள் கோடிகள் குவிக்க புதுச்சேரி அரசே காரணம், இதற்கு என்ன பலன் கிடைத்ததோ, யாம் அறியோம்.

ஸ்டாலினும் ராகுலும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

காத்திருக்கிறேன் 

ஆதாரம் 

No comments:

Post a Comment